நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து தங்களது உயிரை இழந்து வரும் நிலையில், நீட் தேர்வு ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும் மேடைதோறும் பொய் வாக்குறுதி அளித்து மக்களின் வாக்குக்களை பெற்று வெற்றி பெற்றனர். நீட் தேர்வு அச்சத்தால் தமிழ் நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிமுக மாணவர் அணியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.இதனையடுத்து நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் அதிமுக மாணவர் அணி சார்பாக இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. <br /><br />#neet #banneet #admk #edappadipalanisami #edappadi #admkprotest #politics #tamilnadupolitics #tamilnadu <br /><br /><br /><br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D